விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களை காவல்துறையினர் எவ்வித துன்புறுத்தலுக்கும் ஆளாக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அதற்கான முக்கிய விதிகளையும் வகுத்துள்ளது. விசாரணைக்கு அழைக்கும் போது உரிய தேதியும் நேரமும் குறிப்பிட்டு முறையான சம்மன் அனுப்ப வேண்டும் என்றும், சம்மன் இன்றி யாரையும் விசாரணைக்கு அழைப்பதோ அலைக்கழிப்பதோ கூடாது என்றும் நீதிமன்றம் தன் ஆணையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
