கள்ளக்குறிச்சி: விபத்து இழப்பீட்டுத் தொகை மோசடி வழக்கில் பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. விபத்து இழப்பீட்டுத் தொகை 38.79 லட்சத்தை போலி ஆவணம் மூலம் மோசடி செய்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 3 மாவட்ட நீதிபதிகள் உள்பட 44 சாட்சிகளிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியிருந்தது.
