கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காவலர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இசைக் குழுவில் இடம்பெற்றிருந்த காவலருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் நிலைகுலைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை உடனே தூக்கிச் சென்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் ஏற்றினர். ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட காவலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
