பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி அளித்துள்ளார். இயலாமையின் காரணமாகவே நயினார் நாகேந்திரன் இதுபோன்ற கருத்துகளை பேசி வருவதாக விமர்சித்த அவர், அவரது பேச்சுக்கு வார்த்தைகளால் பதிலளிக்காமல் தங்களது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்போம் என தெரிவித்தார். மேலும், “விமர்சனங்களுக்கு மக்கள் பணியின் மூலம் பதில் அளிப்பதே தங்களது நிலைப்பாடு” என்றார்.
