திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் (ஆக.12) ஒரே நாளில் 82 ஆயிரத்து 800 பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 68 லட்சம் வசூலாகியுள்ளது. அன்றைய தினம் 27 ஆயிரத்து 525 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியதுடன், பக்தர்களுக்காக 4 லட்சத்து 34 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும், இலவச தரிசன பிரிவில் வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 12 முதல் 15 மணி நேரம் வரை எடுத்துக்கொண்டதாக கோயில் அதிகாரிகள் கூறினர்
திருப்பதியில் ஒரே நாளில் 82 ஆயிரத்து 800 பக்தர்கள் தரிசனம்
