கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இந்நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2021-ல் வெறும் 15 ஆக பதிவான தாக்குதல் சம்பவங்கள் 2025-ல் 104 ஆக உயர்ந்தது.
இது குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த விவகாரம் வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
