சகோதரர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக புதுவையில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, ஆக. 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்ப முடியுமா என்பது குறித்து, அதற்கான உத்தரவு நகலை தாக்கல் செய்ய மரிய வில்சன் தரப்புக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. சமரசம் செய்ய முடியாத வழக்குகளை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்ப முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
