சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் சபாநாயகரிடம் முக்கிய கோரிக்கை விடுத்தார். அவர் கூறியதாவது, “அமைச்சர்கள் சரியான பதில்கள் வைத்திருக்கிறார்களா என்பதை அறிந்து கொண்டு, எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்கு சபாநாயகர் அனுமதி அளிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் உள்ள பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருகின்றனர்.
