பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாவ்நகர் மாவட்டம் கார்கடி கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்ததாக கூறப்படும் 18 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
