சட்டப்பேரவையில் இன்று (ஆக.21) பேசிய திமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு, ஏற்கெனவே கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தற்போது மீண்டும் அறிவிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், “சமீபத்தில் முதலமைச்சர் விஜய், துறையின் அனைத்து நடவடிக்கைகளும் டிஜிட்டல் ஆக்கப்படும் என அறிவித்துள்ளார். ஆனால், கடந்த ஆட்சியிலேயே 200 ஆண்டுகளுக்கு பழமையான துறை சார்ந்த 4,000 பக்கங்கள் டிஜிட்டல் ஆக்கப்பட்டுள்ளன” என்றார்.
