தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நியாயவிலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் விற்பனை முனைய இயந்திரங்கள் (PoS) சரிவர இயங்காமல் அடிக்கடி பழுதாவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இயந்திரப் பழுதை உடனே சரிசெய்யக் கோரி திருச்சி, கரூர், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரேஷன் கடை பணியாளர்கள் பணியை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
