தமிழ்நாடு முழுவதும் நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். மேலும், குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெ. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார். “அடுத்தடுத்து இடதுசாரிகள் குறிவைக்கப்படுவதைத் தற்செயலானது என எடுத்துக்கொள்ள முடியாது” என பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
