விராலிமலை அடுத்துள்ள மேப்பூதகுடி சாலை வழியாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு அருகே குளம் போல் தேங்கி நின்றது இதுகுறித்து பலமுறை நிர்வாகத்திடம் கூறியும் குழாய் சரி செய்யப்படாததால் தொடர்ந்து அதிலிருந்து வெளியேறும் நீர் குளம் போல் தேங்கி நின்றது இதில் அதே ஊரை சேர்ந்த முத்தழகு மகன் 6ம் வகுப்பு படிக்கும் மாணவன் மகதீப் (11) குளித்துள்ளான் இதில் ஆழமான பகுதிக்கு சென்றபோது சகதிக்குள் கால் சிக்கி நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தான். அரசு அலுவலர்களின் அலட்சியத்தால் மாணவன் உயிர் பறிபோனது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
