விழுப்புரம் அருகே உள்ள சாலாமேடு மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த அஜிஸ்கான் (40) என்பவர் எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்து உயிரிழந்தார். மைதானத்திலேயே திடீரென மயக்கமடைந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாடிக் கொண்டிருந்தபோதே வாலிபர் ஒருவர் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்து வாலிபர் பலி
