நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி தவித்த தமிழ்நாட்டின் கும்பகோணத்தை சேர்ந்த 21 பயணிகள், அந்நாட்டின் பாதுகாப்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட அவர்கள் ராணுவ முகாமில் பாதுகாப்பாக இருக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உறவினர்களுக்கு

ஆறுதலை அளித்துள்ளன. இந்நிலையில், முகாமில் தங்கியுள்ள தமிழர்களுக்கு தேவையான

உணவு மற்றும் மருத்துவ வசதிகளை நேபாளப் பாதுகாப்பு படையினர் வழங்கி வருகின்றனர்.
