சென்னையை அடுத்த தாம்பரம் அருகே திருநீர்மலையில் விசிக நிர்வாகி அன்பழகனை, 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து வெட்டிக் கொலை செய்துள்ளது. கொல்லப்பட்ட அன்பழகன் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், முன்விரோதம் காரணமாக இந்தப் படுகொலை நிகழ்ந்ததா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
