சென்னையில் கடந்த பல ஆண்டுகளாக கேட்பாரற்றும் உரிமை கோரப்படாமலும் வைக்கப்பட்டிருந்த 5,543 வாகனங்களை மின்னணு ஏலம் மூலம் விற்பனை செய்ய காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 1,936 வாகனங்கள் இன்று (ஆக.28) அபாஸ்ட் மின்னணு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்களின் மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்தவுடன், அவை அனைத்தும் விரைவில் ஏலத்தில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
