திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், லாரியில் இருந்து தவறி கீழே விழுந்த நபர் மீது சக்கரம் ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. லாரியில் இருந்து நபர், திடீரென தவறி சாலையில் விழுந்து, அதே லாரியின் சக்கரத்தில் சிக்கினார். அப்போது அவர் தலை மீது லாரியின் பின் சக்கரம் ஏறி, இறங்கியது. இந்த கோர விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மன்னார்குடி அருகே லாரியில் இருந்து தவறி விழுந்தவர் தலை நசுங்கி பலி
