செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் சூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல் கண்டெடுத்த வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கைதான மாணிக் உத்தீன் கொலையான நிஷா என்ற பெண்ணுடன் தகாத உறவில் இருந்து அவரை கர்பமாக்கியுள்ளார். அதனை கலைக்க சொல்லி மாணிக்கும் அவரது மனைவி பகவதி மாஜூ வற்புறுத்தியும் நிஷா மறுத்ததால் அவரை கொலை செய்துள்ளனர். பின்னர் கழுத்தை அறுத்து ரத்தத்தை பிரியாணி அண்டாவில் பிடித்து உடலை துண்டாக்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
