ஆந்திராவைச் சேர்ந்த அருணா (43) என்பவர் திருவள்ளூர் பெரியபாளையம் அருகே விசேஷத்திற்கு வந்துவிட்டுத் திரும்பியபோது, தொட்டாரெட்டி குப்பம் வயல்வெளியில் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அடையாளம் தெரியாமல் இருக்க அவரது முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டுள்ளது. இக்கொலை தொடர்பாகச் செல்போன் பதிவுகளின் அடிப்படையில் வாலிபர் ஒருவரைப் பிடித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
