தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் குளித்துக்கொண்டிருந்த 16 வயது சிறுமி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்ற நிலையில், அங்கு 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லாததாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி சிறுமியை ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அருவியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அவசரகால மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குற்றால அருவியில் தவறி விழுந்த 16 வயது சிறுமி
