தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவை கண்காணிக்க பயன்படுத்தப்பட்ட மின்னணு வருகைப் பதிவு முறை நீக்கப்பட்டு, இனி பழையபடி வருகை பதிவேடு முறை கொண்டு வரப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் இன்று (ஆக.31) சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு காலையில் வழங்கப்படும் சிற்றுண்டிக்கு பதிலாக உணவுப்படி வழங்குவதற்கான கோப்பு அரசின் பரிந்துரையில் உள்ளதாகவும், அதுவும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
