மருத்துவக் கல்லூரிகளில் MBBS படிப்பிற்காக நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே கல்விக்கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் இன்று (செப்.1) தெரிவித்துள்ளார். சில தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 5 ஆண்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இனி அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
