பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். இதன் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தையில் கல்யாண் ஜுவல்லர்ஸ் 4.8%, தங்கமயில் ஜுவல்லரி 1.7%, டைட்டன் 1.3% என முன்னணி நகை நிறுவனப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. இறக்குமதி வரி குறையும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் மோடியின் பேச்சு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
