ராமநாதபுரம் அருகே மூப்பன்வலசையைச் சேர்ந்த பட்டதாரி பெண் சரிதாவுக்கும் வேறொரு நபருக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் லோகேஷ், சரிதாவுடன் நெருக்கமாக இருந்த படங்களை மணமகனுக்கு அனுப்பி மிரட்டி திருமணத்தை நிறுத்தினார். இதனால் மனமுடைந்த சரிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தலைமறைவான லோகேஷை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
