சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பினார். “ஆட்சியில் இல்லாதபோது தூய்மைப் பணியாளர்களை சந்தித்த இன்றைய முதலமைச்சர், தற்போது அவர்களை சந்திக்காதது ஏன்?. தூய்மைப் பணியாளர்களை எப்போது சந்திப்பீங்க?” என கேள்வி எழுப்பினார். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
