வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக நடிகர் சோனு சூட் காத்மாண்டு சென்றுள்ளார். இதுகுறித்து தனது X பதிவில், நேபாளமே, நீங்கள் தனியாக இல்லை. வீடுகள், குடும்பத்தை இழந்த உங்களின் வாழ்வில் புதிய தொடக்கத்தை

காண நாங்கள் (இந்தியா) உதவுவோம் என்றார். இதற்கிடையே வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட திரிசூலியை நடிகர் சோனு சூட் பார்வையிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது
