பிரேமலதாவின் கோரிக்கையை அமைச்சர் ரமேஷ் உடனடியாக ஏற்றுக் கொண்டுள்ளார். பேரவையில் பேசிய பிரேமலதா, ஆய்வுக்கு செல்லும்போது எங்களுடன் அமைச்சர்களும் வர வேண்டும். அப்போது தான் மக்கள் பிரச்னைகளை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், கூட்டத்தொடர் முடிந்த உடனேயே உறுப்பினரோடு சேர்ந்து ஆய்வு செய்ய தயாராக இருக்கிறேன் என உறுதியளித்தார்.
