தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 30 பயணிகளுடன் பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, நெடுஞ்சாலையின் நடுவே நின்றிருந்த டேங்கர் லாரியின் பின்புறத்தில் மோதியது. சென்டர் மீடியனில் நடப்பட்டுள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த டேங்கர் லாரி மீது பேருந்து மோதியதில், ஓட்டுநர் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 15 பயணிகள் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
