இந்தியாவிற்காக சர்வதேச த்ரோபால் போட்டிகளில் 4 தங்க பதக்கங்களை வென்ற ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வீரர் அமர்தீப் குமார், ராஞ்சி தெருக்களில் காய்கறி விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. போட்டிகளுக்காக வாங்கிய கடனை அடைக்கவும் குடும்பத்தை காப்பாற்றவும் தந்தையுடன் சேர்ந்து காய்கறி விற்று வரும் அவர், விளையாட்டுத் துறையிடம் பலமுறை விண்ணப்பித்தும் அரசு வேலை கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
