வடக்கு சிக்கிம் பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அப்பகுதியில் பாயும் டீஸ்டா மற்றும் சியாகூங் ஆகிய ஆறுகளின் இயல்பான நீரோட்டம் பகுதியளவில் தடைபட்டுள்ளது. இந்த எதிர்பாராத இயற்கை சீற்றத்தால் ஆற்று படுகைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு அல்லது செயற்கை ஏரிகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றி, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்து அரசு உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடக்கு சிக்கிமில் நிலச்சரிவு: நிலைமையை சமாளிக்க ஆலோசனை
