விழுப்புரம்: கோட்டக்குப்பம் அருகே பொம்மையார்பாளையத்தில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். தங்கும் விடுதி நடத்தி வந்த அஜித் என்ற இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. அஜித்தின் தந்தை பழனிவேல் அளித்த புகாரின்பேரில் ஹரிராஜ், பூபதி, பிரதீஷ், லோகேஷ், சஞ்சய் ஆகிய 5 பேர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
