கடலூர்: திருப்பாதிரிப்புலியூரில் கலா என்ற மூதாட்டி நகைக்காக கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். முரளி என்பவரின் வீட்டு வாசலில் கலா உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் முரளி வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி அணிந்திருந்த நகைகளை கொள்ளை அடித்து, அவரை கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஒட்டியுள்ளனர். கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
