காஞ்சிபுரம் அருகே பிரசவ வலி வந்த பெண்ணை மருத்துவமனைக்கு செல்லவிடாமல் தடுத்த புகாரில் மர வியாபாரி ஆறுமுகம் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணுக்கு பிரவச வலி வந்த நிலையிலும், வாங்கிய ரூ.20,000 கடனை கொடுத்துவிட்டு மரம் அறுக்கும் இடத்தில் இருந்து செல்லுமாறு வியாபாரி கூறியதாக குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். அப்பெண் அங்கேயே பிரசவித்த நிலையில், தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் கர்ப்பிணி மரணம்.. மர வியாபாரி மீது வழக்கு
