தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளது. நடப்பாண்டில் இதுவரை தமிழ்நாடு முழுவதும் 16,577 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தினமும் 200 பேருக்கு மேல் டெங்கு காய்ச்சல் உறுதி

செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
