“மாணவர் பாரதிதாசனுக்கு உறுதியளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகையை வழங்குவதற்கு இவ்வளவு கெடுபிடிகள் விதிப்பதற்கான தேவை என்ன?” என கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். கல்விக்காக 2026-லும் ஒரு மாணவர் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டால், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற இலக்கை நோக்கிய போராட்டங்களின் நோக்கத்தையே அரசு சிதைத்துவிட்டதாக பொருள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், “அரசின் நடவடிக்கைகள் எப்படி இருந்தாலும், மாணவரின் கல்விக்கு திமுகவும் தமிழ்நாட்டு மக்களும் உறுதுணையாக நிற்பார்கள்” என்றார்.
