அம்பேத்கர் உயர்கல்வித் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆய்வு மேற்கொண்டு வரும் மாணவர் பாரதிதாசனுக்கு வழங்க வேண்டிய நிதியை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற நிதிக்காக இனி எந்த மாணவரும் அலைக்கழிக்கப்படாத வகையில், இந்தப் பிரச்சினைக்கு தமிழ்நாடு அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. மாணவர்களின் உயர்கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு தேவையான ஆதரவு தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
