தமிழகத்தில் 32 மாவட்டத்தில் மழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தி.மலை மற்றும் க.குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூறியகன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களிலும் மேலும் சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், மதுரை, சிவகங்கை, கடலூர் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
