இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சனை நீக்கியது தனது பயிற்சியாளர் பதவிக்காலத்தில் எடுத்த மிகக் கடினமான முடிவு என தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். சாம்சனின் திறமை குறித்து சந்தேகமில்லை என்றும், வீரர்களின் தற்போதைய பார்மையும் தேர்வின்போது கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகவும் கூறினார். 3 அல்லது 4 போட்டிகளில் வீரர் சரியாக விளையாடவில்லை என்பதற்காக அவர் மோசமான வீரராகிவிடமாட்டார் என்றும் கம்பீர் குறிப்பிட்டார்.
