தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ல் 8 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அண்ணாநகரைச் சேர்ந்த மாரியப்பன் (55) கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி முருகன், குற்றவாளி மாரியப்பனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
