Skip to content

வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தவர்களிடம் கைவரிசை… கொள்ளையர்கள் 3 பேர் கைது…

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட அசாய கார் பார்க்கிங் அருகில் வேளாங்கண்ணி போலீசார் ‌ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில்
சுற்றி நிரிந்த மூன்று நபர்களை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மூவரும் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த பயணிகளிடம் இருந்து வழிப்பறி மற்றும் செல்போன் திருட்டு சம்பங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 4பவுன் தங்க தாலிசெயின், 4 செல்போன்கள் மற்றும் 1 ஸ்மார்ட் வாட்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி குற்றசெயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளான திருப்பூரைச் சேர்ந்த தினேஷ், சீர்காழியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், அருளழகன் ஆகிய

மூவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இது போன்ற குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் உங்கள் எஸ்பியிடம் பேசுங்கள் 8428103090 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் தருபவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!