Skip to content
Home » இன்று15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

இன்று15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

  • by Senthil

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட அறிக்கை.. தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (அக். 9)முதல் 11-ம் தேதி வரை சில இடங்களிலும், வரும் 12-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 13,14-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரைமற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும் 10, 11-ம் தேதிகளில் மேற்கூறிய மாவட்டங்களில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் நீங்கலாக இதர மாவட்டங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!