மிக்ஜம் புயல் , கன மழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் இந்த முயற்சிக்குத் துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள் ,இயக்கங்கள், தனிநபர்கள் எனபலரும் முதலமைச்சாின பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள செய்தியில், ரூ.10 லட்சம் நிதி அளித்த சகோதரர் சிவகார்த்திகேயனுக்கு அன்பும் – நன்றியும்.
ஒன்றிணைந்து செயல்படுவோம் – இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்! என்று தெரிவித்துள்ளார்.