திருச்சி மாவட்டம், மணப்பாறை கோவில்பட்டி சாலையில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பால் கொள்முதல் விலை உயர்வு ஏற்படும் போது பால் விற்பனை விலையும் உயர்த்துவார்கள். அதேபோல் நேற்று மாலை ஒரு லிட்டர் பால் 45 ரூபாய் இருந்து 3, ரூபாய் உயர்த்தி 48 ரூபாய்க்கு பால் விநியோகம் செய்தார்கள். இந்த லிட்டருக்கு 3,ரூபாய் பால் உயர்வை கண்டித்து மணப்பாறை நகர் அதிமுகவினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பால் உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அந்த வாக்குவாதத்தின் அங்கு இருந்த பால் வெண்டர்கள் நாங்கள் பல காலமாக எங்களுடைய சம்பளங்களை உயர்த்தி கேட்டு வரும் நிலையில் தற்போது பால் விலை உயர்வை திரும்பி பெற நீங்கள் கூறுகிறீர்கள் எங்களுக்கு எவ்வாறு சம்பள உயர்வு தருவார்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
இந்த முற்றுகை போராட்டத்தின் போது பால் உற்பத்தியாளர் சங்க கூட்டுறவு சொசைட்டியின் மேலாளர் தங்கவேலிடம் பால் உயர்வு தமிழக அரசு உயர்த்தியதா அல்லது யார் உயர்த்தியது என்று கேள்வி எழுப்பிய போது அதற்கு மேலாளர் இந்தப் பால் விலை உயர்வு தன்னிச்சையாக தான் நான் உயர்த்தினேன் எனது மேல் அதிகாரிகளிடம் கேட்டு உடனே குறைத்து விடுகிறேன் என்று கூறினார். உடனே பால் விலை உயர்வை திரும்பி பெறாவிடில் நகர அதிமுக சார்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரித்து விட்டு சென்றனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக அந்த அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.