Skip to content
Home » விபத்தில் மூளைச்சாவு…. உடல் உறுப்புகளை தானம்…. பலரை வாழவைத்த 13வயது சிறுவன்..

விபத்தில் மூளைச்சாவு…. உடல் உறுப்புகளை தானம்…. பலரை வாழவைத்த 13வயது சிறுவன்..

  • by Senthil

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் அருகே உள்ள கொள்ளகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்(13). இவர் டிச.27-ம்  இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நாராயணகுப்பம் அருகே சாலைவிபத்தில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் சந்தோஷை மீட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவருக்கு டிச.28 அன்று இரவு 10:15 மணிக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

இந்தநிலையில் சந்தோஷ் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை என்று மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.  அதையடுத்து நேற்று  காலையில் அவரது இதயம் மற்றும் அவரது இரண்டு நுரையீரல்களும் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ராணிப்பேட்டை சிஎம்சிக்கு சிறுநீரகம், கல்லீரலும் வழங்கப்பட்டுள்ளது.

சந்தோஷின் இரண்டு கண்களும் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு  தானமாக கொடுக்கப்பட்டன. அதன்பின்னர் சிறுவனின் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. மகனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்த பெற்றோரின் செயலை அனைவரும் பாராட்டினர். சந்தோஷின் தந்தை சௌந்தரராஜன் விவசாயி. அவரது தாயார் தனலட்சுமி. உயிரிழந்த சந்தோஷுக்கு நித்யா என்ற சகோதரியும், வெங்கடேஸ்வரா என்ற 11-ம் வகுப்பு படிக்கும் சகோதரரும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!