மேற்கு வங்கம்: உடல் எரிச்சல் ஏற்படுவதாக கூறி கடந்த 1 மாதமாக இரவும் பகலும் குளத்திலேயே தங்கி இருக்கிறார் சிறுவன் இக்பால் (16). ஜின் தன்னை பிடித்துள்ளதாக இக்பால் தெரிவிக்கும் நிலையில், இதற்காக சிகிச்சை எடுத்தும் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும், மருத்துவ செலவுகளுக்கு அரசு உதவ வேண்டும் எனவும் அவரின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
