Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிறந்த குழுந்தையை குப்பையில் வீசிய தாய்… உடலை நாய் கவ்வி சென்ற அவலம்

குழந்தையை பெற்றெடுத்து குப்பையில் வீசிய கொடூர தாய்: உடலை நாய் கவ்விச் சென்ற அவலம்.

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த ஆர்.எஸ்.மாத்தூரிலிருந்து, அசாவீரன் குடிகாடு செல்லும் சாலையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையை குப்பையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.மாத்தூரிலிருந்து அசாவீரன் குடிகாடு செல்லும் சாலையில் வாகன ஓட்டி ஒருவர் பயணிக்கும்போது, நாய் ஒன்று சாலையோரம் இருந்த குப்பையை கிளறிக் கொண்டிருந்ததை கண்டு வண்டியை நிறுத்தியுள்ளார். அப்போது வாகன ஓட்டியை கண்டதும் , குழந்தையின் உடலை கவ்விக் கொண்டு நாய் ஓடத் தொடங்கியுள்ளது.

இதனையடுத்து பொதுமக்கள் நாயிடமிருந்து இறந்த நிலையில் குழந்தையின் உடலை மீட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த குவாகம் காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், குழந்தையின் பெற்றோர் யார்? இறந்த நிலையில் பெண் குழந்தை குப்பையில் வீசப்பட்டதா? (அ) உயிருடன் பிறந்து குப்பையில் வீசப்பட்டு குழந்தை இறந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!