தவெக அரசின் முதல் வேளாண்மை பட்ஜெட் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த திமுக ஆட்சியில் அறிவித்தது போலவே தவெக அரசும் ஸ்டிக்கர் ஒட்டி அறிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியில் சொன்ன எதையும் செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 வழங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் அதுபற்றி அறிவிப்பு இல்லை. பட்ஜெட் என்ற பெயரில் நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள் என சாடினார்.
