Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கீழடி டிஎன்ஏ ஆய்வில் வெளிவந்த உலகத் தமிழர்களை மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை!

கீழடி டிஎன்ஏ ஆய்வில் வெளிவந்த உலகத் தமிழர்களை மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை!

கீழடி, ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகலை ஆகிய பண்டைய தொல்லியல் களங்களில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் மற்றும் மனித எச்சங்களை வைத்து நடத்தப்பட்ட பண்டைய டிஎன்ஏ (Ancient DNA) ஆய்வில், பண்டைய தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையே மிக நெருங்கிய மரபியல் தொடர்பு இருப்பது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் மற்றும் டிஎன்ஏ ஆய்வு முடிவுகள். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பண்டைய டிஎன்ஏ ஆய்வகத்தின் மரபியல் துறைத் தலைவர் மற்றும் முதன்மை ஆய்வாளர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில், 75,000-க்கும் மேற்பட்ட மரபியல் தரவுப் புள்ளிகள் (DNA Data Points) தீவிரமாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில், கீழடிப் பகுதியில் வாழ்ந்த பண்டைய மனிதர்களின் மரபணு அமைப்பு, தற்போதைய தென்னிந்தியர்கள், இலங்கை தமிழர்கள் மற்றும் பிற தெற்காசிய சமூகத்தினரின் மரபியலோடு நேர்த்தியாக ஒத்துப்போவது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பண்டைய தமிழ் சமூகத்தின் வாழ்வியல் மற்றும் உணவு முறைகள் குறித்தும் இந்த உயிரி-வேதியியல் (Biochemical) ஆய்வுகள் பல சுவாரஸ்யமான தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. பண்டைய தமிழர்கள் அரிசி, தினை வகைகளை முதன்மையாகப் பயிரிட்டதுடன், பால், நெய் மற்றும் காய்கறி சார்ந்த சத்தான உணவுகளைப் பெருமளவில் உட்கொண்டு ஆரோக்கியமான மற்றும் மேம்பட்ட நகர நாகரிக வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

வைகை நதிக்கரை நாகரிகத்தின் தொன்மையை உலகிற்குப் பறைசாற்றும் கீழடி அகழாய்வு முடிவுகள், எல்லைகளைக் கடந்து தமிழினத்தின் தொன்மை வாய்ந்த தொடர்ச்சியையும், இலங்கைத் தமிழர்களுடனான வரலாற்று மரபணுப் பிணைப்பையும் உறுதி செய்துள்ளது. இந்தத் தொல்லியல் மற்றும் மரபியல் ஆய்வு முடிவுகள் உலகத் தமிழர்களிடையேயும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களிடையேயும் பெரும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!