கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் உள்ள கரூர்-திருச்சி புறவழி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனம் மீது கார் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண் உயிரிழந்தார். அவருடன் வந்த மற்றொரு பெண் மற்றும் காரில் வந்த 2 பேர் என மொத்தம் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து முசிறி பகுதியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விபத்து நடந்த இடத்தில் கிடந்த பையில் இருந்த ரொக்க பணம் மற்றும் பொருட்களை அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சில் வைத்துவிட்டு இது
தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயம் காயம் அடைந்தவர்களை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்த 108 ஆம்புலன் சுதாகர், (டிரைவர்) பாலகுமார் ஆகிய 2 பேரும் பொதுமக்கள் தங்களது வண்டியில் வைத்த பையை பார்த்துள்ளனர். அப்போது விபத்து
நடந்த இடத்தில் கிடைத்த ரூ.3¾ லட்சத்தை பணத்தை தாங்கள் எடுத்துக் கொள்ளாமல் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைத்த நபர்கள், தங்களை நம்பி கொடுத்த தொகையை உரியவர்களிடம் முசிறி 108 ஆம்புலன்ஸ் பணியாளர் ஒப்படைத்தனர். இருவரின் மனிதாபிமானம், நேர்மையான செயலை அறிந்த விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.